காஜாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் பிராந்திய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஏற்கனவே அமெரிக்கா மூன்று கட்ட போர் நிறுத்த ஒப்பந்த திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை அமல்படுத்தும் முயற்சியாக சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளார். முதல் கட்டமாக எகிப்து சென்று அங்கு அதிபர் அப்துல் பட்டா அல்சிசியுடன் சந்திப்பு நடத்தினார். அது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதைத் தொடர்ந்து ஜோர்டான், இஸ்ரேல், கத்தார் போன்ற நாடுகளுக்கும் அவர் சென்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்று தகவல்கள் வந்துள்ளன.