அதிபர் முய்சு மோடியிடம் மன்னிப்பு கேட்க எதிர்க்கட்சி வலியுறுத்தல்

January 31, 2024

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அந்நாட்டு ஜும்ஹூரி கட்சி தலைவர் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். மாலத்தீவு பாராளுமன்றத்தில் அதிபர் முகமது முய்சுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்ராஹிம் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாம் அண்டை நாடு பற்றி உறவில் விரிசல் ஏற்படும் வகையில் பேசக்கூடாது. அது எந்த நாடாகவும் இருக்கட்டும். நம் நாட்டிற்கென கடமை […]

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அந்நாட்டு ஜும்ஹூரி கட்சி தலைவர் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

மாலத்தீவு பாராளுமன்றத்தில் அதிபர் முகமது முய்சுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்ராஹிம் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாம் அண்டை நாடு பற்றி உறவில் விரிசல் ஏற்படும் வகையில் பேசக்கூடாது. அது எந்த நாடாகவும் இருக்கட்டும். நம் நாட்டிற்கென கடமை உள்ளது. அதை கருத்தில் கொள்ள வேண்டும். இந்த கடமையை கருத்தில் கொண்டு தான் ஜனாதிபதி சொல்லி இந்தியா அவுட் பிரச்சாரத்திற்கு தடை விதித்தார். இந்த தடை உத்தரவை அதிபர் முய்சு ஏன் ரத்து செய்யவில்லை என முன்னாள் அதிபர் அப்துல்லாஹ் யாமீன் கேள்வி எழுப்பியுள்ளார். நான் ஜனாதிபதி உத்தரவை ரத்து செய்யக்கூடாது. இது தேசத்திற்கே பெரிய இழப்பு. மேலும் சீன பயணத்திற்கு கூறிய கருத்துக்களுக்கு முகமது முய்சு இந்திய அரசு மற்றும் பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu