வரும் 2029 ஏப்ரலில், அப்போஃபிஸ் என்ற சிறுகோள் பூமியை நெருங்கி வரும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர். இது பூமியிலிருந்து வெறும் 20,000 மைல்கள் தொலைவில் கடந்து செல்லும். இது பல செயற்கைக்கோள்களை விட மிகவும் நெருக்கமான தூரம். ஆரம்பத்தில் இது பூமிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று கருதப்பட்டாலும், நாசா தற்போது எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த சிறுகோள் பூமியுடன் மோதுவது போன்ற கற்பனை நிலைமை ஏற்பட்டால், அதன் விளைவுகள் பேரழிவாக இருக்கும். 1000 மெகா டன் TNT வெடிப்பிற்கு சமமான ஆற்றலை இது வெளியிடும். இது ஒரு பெரிய நகரத்தை அழிக்கும் அளவிற்கு பேரழிவை ஏற்படுத்தும். இந்த நிலையில், அப்போஃபிஸ் சிறுகோள் பூமிக்கு நெருக்கமாக வரும் நிகழ்வு, விஞ்ஞானிகளுக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. நாசாவின் OSIRIS-APEX மற்றும் ESA இன் ராம்செஸ் போன்ற விண்கலங்கள் அப்போஃபிஸ் சிறுகோளின் கலவை மற்றும் பூமியின் ஈர்ப்பு விளைவுகளை ஆராய அனுப்பப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகள், பூமிக்கு அருகில் வரும் சிறுகோள்களைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்த உதவும்.