நவம்பர் மாத ஜவுளி ஏற்றுமதி 11.7% உயர்வு

December 17, 2022

இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி நவம்பர் மாதத்தில், 11.7% உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, 4 மாதங்களாக ஜவுளி ஏற்றுமதி சரிந்து வந்த நிலையில், நவம்பர் மாதத்தில் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி அமைப்பின் தலைவர் நரேன் கோயங்கா, "நவம்பர் மாத ஜவுளி ஏற்றுமதி 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவாகி உள்ளது" என்று கூறியுள்ளார். ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் ஏற்பட்டிருந்த சரிவு நிலை, தற்போது சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடப்பு நிதி ஆண்டில், ஜவுளி […]

இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி நவம்பர் மாதத்தில், 11.7% உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, 4 மாதங்களாக ஜவுளி ஏற்றுமதி சரிந்து வந்த நிலையில், நவம்பர் மாதத்தில் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி அமைப்பின் தலைவர் நரேன் கோயங்கா, "நவம்பர் மாத ஜவுளி ஏற்றுமதி 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவாகி உள்ளது" என்று கூறியுள்ளார்.

ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் ஏற்பட்டிருந்த சரிவு நிலை, தற்போது சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடப்பு நிதி ஆண்டில், ஜவுளி ஏற்றுமதி மதிப்பு 17.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நரேன் கோயங்கா கூறியுள்ளார். அதில், ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், ஜவுளி ஏற்றுமதியில் உள்ள சிக்கல்களை களைய, அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu