அமைச்சர் பொன்முடிக்கு சொத்து குவிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது.
உயர் கல்வித் துறை அமைச்சர் ஆக இருந்த அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்தனர். இவர்களுக்கு வழங்கப்பட்ட விடுதலை தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் இவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது. மேலும் இவர்கள் தலா 50 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக பொன்முடி தனது எம்எல்ஏ பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் அமைச்சர் பதவி நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் தற்போது இவருக்கு வழங்கப்பட்டுள்ள மூன்று ஆண்டு சிறை தண்டனையினை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வகையில் 30 நாட்கள் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஜனவரி இரண்டாம் தேதி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அமைச்சர் பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.