ஆப்பிள் நிறுவனத்தின் டெவலப்பர் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் என்ற பெயரில் இது அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது, ஒருங்கிணைந்த, உள்ளுணர்வு கொண்ட, சக்தி வாய்ந்த, தனிப்பட்ட மற்றும் தனி உரிமை கொண்ட தொழில்நுட்பம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி, தரவுகளை எழுதுவது, பல்வேறு செயலிகளில் தரவுகளை மறு உருவாக்கம் செய்வது போன்ற சேவைகளை பெறலாம். மேலும், உண்மைக்கு நிகரான புகைப்படங்களை உருவாக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் சாதனத்தில் உள்ள சிப்செட் வழியாக இந்த செயற்கை நுண்ணறிவு சேவை வழங்கப்படும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.