பல்வேறு கைபேசி நிறுவனங்கள் பிலிப் மற்றும் ஃபோல்டபில் கைபேசிகளை உருவாக்க தொடங்கியுள்ளன. தற்போது ஆப்பிள் நிறுவனமும் இந்த துறையில் களமிறங்கியுள்ளது.
அண்மைக்காலமாக, போல்டபிள் மற்றும் பிலிப் கைபேசிகளுக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஆப்பிள் நிறுவனம் போல்டபிள் கைபேசி உற்பத்தியில் களமிறங்கி உள்ளது. ஏற்கனவே, சாம்சங், ஒப்போ, ஒன் பிளஸ், மோட்டோரோலா, சியோமி உள்ளிட்ட பிரபல கைபேசி நிறுவனங்கள் போல்டபிள் கைபேசிகளை தயாரிக்க தொடங்கியுள்ளன. இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் ஃபோல்டபில் கைபேசி 2025 ஆம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது. ஏற்கனவே, பிலிப் கைபேசி தயாரிப்பை தொடங்குவதாக அறிவித்த பிறகு, ஆப்பிள் நிறுவனம் அதனை பாதியில் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.