ஆப்பிள் ஊழியர்கள் சாட் ஜிபிடி பயன்படுத்த தடை

ஆப்பிள் ஊழியர்கள் சாட் ஜிபிடி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பிற நிறுவனங்களின் செயற்கை நுண்ணறிவு கருவிகள் மற்றும் சாதனங்களை பயன்படுத்தவும் ஆப்பிள் நிறுவனம் தடை விதித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஊழியர்கள் மூலம், நிறுவனத்தின் முக்கியமான தகவல்கள் கசியக்கூடும் என்று கருதுவதால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆப்பிள் கூறியுள்ளது. கடந்த மாதம், சாட் ஜிபிடியில் 'இன்கோகனிட்டோ மோட்' கொண்டுவரப்பட்டது. இதன் மூலம், சாட் ஜிபிடி பயன்படுத்தும் நபரின் உரையாடல் பதிவுகள் பதிவு […]

ஆப்பிள் ஊழியர்கள் சாட் ஜிபிடி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பிற நிறுவனங்களின் செயற்கை நுண்ணறிவு கருவிகள் மற்றும் சாதனங்களை பயன்படுத்தவும் ஆப்பிள் நிறுவனம் தடை விதித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஊழியர்கள் மூலம், நிறுவனத்தின் முக்கியமான தகவல்கள் கசியக்கூடும் என்று கருதுவதால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆப்பிள் கூறியுள்ளது.

கடந்த மாதம், சாட் ஜிபிடியில் 'இன்கோகனிட்டோ மோட்' கொண்டுவரப்பட்டது. இதன் மூலம், சாட் ஜிபிடி பயன்படுத்தும் நபரின் உரையாடல் பதிவுகள் பதிவு செய்யப்பட மாட்டாது. இதனால், அவரது தனி உரிமைகள் பாதுகாப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும், பாதுகாப்பு கருதி, சாட் ஜிபிடி பயன்படுத்துவதற்கு ஆப்பிள் தடை விதித்துள்ளது. மேலும், மைக்ரோசாப்ட் குழுமத்தை சேர்ந்த ஜிட் ஹப் நிறுவனத்தின் கோ பைலட் பயன்படுத்தி கோடுகளை எழுதவும் ஆப்பிள் தடை விதித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu