தைவானைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம், தனது இந்திய பிரிவில், 500 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாக கூறியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்திக்கான முக்கிய ஹார்டுவேர் பொருட்களை பாக்ஸ்கான் நிறுவனம் உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியா, படிப்படியாக ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய உற்பத்தி மையமாக மாறிவருகிறது. அடுத்த 2 - 3 வருடங்களில், 10% ஐபோன் உற்பத்தியை இந்தியா கையாளும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். அந்த வகையில், பாக்ஸ்கான் நிறுவனம், இந்த முதலீட்டை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. தைவான் பங்குச் சந்தையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த தகவல்களை பாக்ஸ்கான் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, குஜராத் மாநில அரசுடன், 20 பில்லியன் டாலர்கள் மதிப்பில் செமி கண்டக்டர் ஆலையை கட்டமைக்க, பாக்ஸ்கான் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.