இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் 190 நிறுவனங்கள் உதிரி பாகங்கள் தயாரித்து வருகின்றது. அவற்றில் 12 நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவில் உள்ளது. அதில் ப்லக்ஸ், ஹலா ஹை, லிங்கி ஹை டெக், பெகாட்ரான், தாய்வான் நிறுவனம் ஆகிய ஐந்து நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளது.
சீனாவில் ஐபோன் உற்பத்தியை குறைக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால் இந்தியாவில் தயாரிப்பாளர்கள் ஆன ஃபாக்ஸ்கான், பெகாட்ரான், விஸ்டன் ஆகியவற்றை உற்பத்தியை அதிகரிக்க அறிவுறுத்தியுள்ளது. ஐபோன் உற்பத்திக்கு தேவையான உதிரி பாகங்கள் தயரிக்கும் நிறுவனங்கள், அதிக அளவில் இந்தியாவில் உருவாகி 5 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். குறிப்பாக செமி கண்டக்டர், டிஸ்பிலே பேணல், உள்ளிட்ட உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் வரலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.