ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் இலக்கை தாண்டி உள்ளது. அதன்படி, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளின் பொருளாதாரத்தை விட உயர்வாக, ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு பதிவாகியுள்ளது. விரைவில், இந்தியாவின் பொருளாதார மதிப்பை விடவும் ஆப்பிள் சந்தை மதிப்பு உயரும் என கருதப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக நாளின் போது, ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 3.066 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவாகியுள்ளது. இது உலகின் 6 முன்னணி பொருளாதார நாடுகளின் ஜிடிபி யை விட சற்றே குறைவாக உள்ளது. மேலும், 2023 ஆம் ஆண்டில் இதுவரை ஆப்பிள் பங்குகள் 55% உயர்வை பதிவு செய்துள்ளன. எனவே, வரும் மாதங்களில், இந்தியாவின் ஜிடிபியை ஆப்பிள் சந்தை பதிப்பு தாண்டும் என கூறப்படுகிறது.