கடந்த ஜனவரி மாதத்திற்கு பின்னர் முதல் முறையாக, ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3 ட்ரில்லியன் டாலர்களை கடந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த மதிப்பு எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் 1.3% உயர்ந்து, பங்கு ஒன்று 191.99 டாலர்களில் வர்த்தகமாகி வருகிறது. ஆப்பிள் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அதி நவீன தொழில்நுட்ப சாதனங்களால் அதன் சந்தை மதிப்பு மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க சந்தையில் 3 ட்ரில்லியனை கடந்த முதல் நிறுவனமாக ஆப்பிள் அறியப்படுகிறது. மேலும், ஒரு ட்ரில்லியன் சந்தை மதிப்பை கொண்ட 4 நிறுவனங்கள் அமெரிக்க பங்குச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அவை, அல்பாபெட், மைக்ரோசாப்ட், அமேசான் மற்றும் நிவிடியா ஆகும். எனவே, ஆப்பிள் நிறுவனத்தின் முன்னேற்றம் இந்த 4 நிறுவனங்களுடன் நடைபெறும் தொழில் போட்டியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.