ஆப்பிள் கைபேசிகளின் ஸ்கிரீன்களை வடிவமைக்கும் கார்னிங் நிறுவனம் தமிழ்நாட்டில் கொரில்லா கிளாஸ் ஆலையை அமைக்க உள்ளது. கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த ஆலை அமைக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூருக்கு அருகே பிள்ளைபாக்கம் என்ற ஊர் அமைந்துள்ளது. இங்கு, 25 ஏக்கர் நிலப்பகுதியில் கார்னிங் நிறுவனத்தின் கொரில்லா கிளாஸ் ஆலை அமைக்கப்பட உள்ளது. இந்த ஆலை மூலம், 300 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்தியாவில், கார்னிங் நிறுவனத்தின் ஆலை அமைக்கப்படுவதன் மூலம், ஆப்பிள் நிறுவனத்தின் மற்றும் ஒரு உற்பத்தியாளர் இந்தியாவில் நுழைந்துள்ளார். எனவே, ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய உற்பத்தி மேலும் எளிமையாக்கப்படுகிறது.