தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டதை தொடர்ந்து
பி.ஈ மற்றும் பி.டெக் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. இதில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவ - மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை நிரப்பி அசல் சான்றிதழ்களையும் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாணவ மாணவிகள் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி ஜூன் 6ஆம் தேதி ஆகும். அசல் சான்றிதழ்களை பதிவேற்ற கடைசி தேதி ஜூன் 12-ம் தேதி ஆகும். அதனை தொடர்ந்து ஜூன் 13ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் சான்றிதழ்களை சரிபார்த்துக் கொள்ளலாம். அடுத்து ஜூலை 10ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியாக உள்ளது. ஜூலை 15 முதல் 20ஆம் தேதி வரை மாணவ மாணவிகள் தங்களின் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். அதனை தொடர்ந்து பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது