பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுகவில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வரும் 21ஆம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள் தலைமை கழகத்தில் வரும் 21.2.2024 முதல் 1.3.2024 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விநியோகிக்கப்படும். மேலும் இதற்கான உரிய கட்டண தொகையை செலுத்தி அதில் உள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்து தலைமை கழகத்தில் வழங்கலாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.