தமிழகத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த நான்கு அமைச்சர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இதில் நான்கு மாவட்டங்களில் மீட்பு பணிகளுக்காக கண்காணிப்பு அதிகாரிகளாக ஐ. ஏ. எஸ். அதிகாரிகள் நேற்று நியமனம் செய்யப்பட்டிருந்தனர். இதில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாகராஜன், நெல்லைக்கு செல்வராஜ், தூத்துக்குடி மாவட்டத்தில் ஜோதி நிர்மலா, தென்காசி மாவட்டத்திற்கு சுன் சொங்கம் ஜதக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக அமைச்சர் ஏ.வா வேலு, உதயநிதி ஸ்டாலின், ராஜா கண்ணப்பன், மூர்த்தி ஆகிய அமைச்சர்கள் கூடுதலாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.