கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கூடுதல் பணியாளர்கள் நியமனம்

January 3, 2024

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் உரிமை திட்டத்தின் மூலம் மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் மூலம் மாதா மாதம் ரூபாய் 1000 குடும்ப தலைவிகளுக்கு அவரவர் வங்கி கணக்கில் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக கூடுதல் ஆக 7 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு சேர்த்து இத்திட்டம் செயல்படுத்த பட்டது. இதன் மூலம் […]

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் உரிமை திட்டத்தின் மூலம் மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் மூலம் மாதா மாதம் ரூபாய் 1000 குடும்ப தலைவிகளுக்கு அவரவர் வங்கி கணக்கில் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக கூடுதல் ஆக 7 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு சேர்த்து இத்திட்டம் செயல்படுத்த பட்டது. இதன் மூலம் உரிமை தொகை பெறுபவர்கள் எண்ணிக்கை
1,13,84,300 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மேலும் பல குடும்பத் தலைவிகள் உரிமை தொகைகாக விண்ணப்பித்து இருந்தனர். அந்த மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வரும் நிலையில் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த தமிழக அரசு கூடுதல் பணியாளர்களை நியமித்து வருகிறது.இதற்காக 8 சிறப்பு தாசில்தார் மற்றும் 101 துணை தாசில்தார் பணியிடங்களை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu