தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு புதிய உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு புதிய உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவனருள், ஐ.ஆர்.எஸ் அதிகாரி சரவணகுமார், மருத்துவர் தவமணி, உஷா குமார் பொருளாதார வல்லுநர் முனைவர். பிரேம்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 6 வருடம் அல்லது 62 வயது வரை பதவியில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.