தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கைக்கான பார்வையாளர்கள் ஆக 57 ஐ. ஏ. எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற நிலையில் ஏழாம் கட்ட மக்களவைத் தேர்தல் ஜூன் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து ஜூன் 4 ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கைக்கான பார்வையாளர்களை நியமனம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தென் சென்னை, வடசென்னை, மத்தியசென்னை உட்பட பதினாறு தொகுதிகளுக்கு இரண்டு பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி தொகுதிக்கு மட்டும் மூன்று பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 57 ஐஏஎஸ் அதிகாரிகள் 39 தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்