தற்போது, கொரோனா வைரஸின் புதிய வேரியன்ட் ஆர்க்டரஸ் வேகமாக பரவி வருகிறது. எனவே, இந்த வைரஸ் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், உலக சுகாதார அமைப்பு, ஆர்க்டரஸ் பாதிப்பு ஏற்பட்டதற்கான அறிகுறிகளை தெரிவித்துள்ளது. மூச்சு விட முடியாத தன்மை, இருமல், கண்கள் சிவப்பாவது, கண்களில் எரிச்சல், வீக்கம் ஆகியவை முக்கிய அறிகுறிகளாக சொல்லப்பட்டுள்ளது.
எக்ஸ்பிபி 1.16 என்ற கொரோனா வைரஸ் ஆர்க்டரஸ் என்று அறியப்படுகிறது. இது, தற்போது 22 உலக நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய நாடுகளில் இந்த கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால், மறுபடியும் முக கவசம் அணிந்து வெளிவருமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், இதற்கு முந்தைய ஒமைக்ரான் வைரஸை விட 1.2 மடங்கு அதிக பாதிப்பை ஆர்க்டரஸ் தரவல்லது என டோக்கியோ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.