உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்காவை தொடர்ந்து ஆர்ஜென்டினா விலகுவதாக அதன் அதிபர் ஜேவியர் மிலே அறிவித்துள்ளார். இதுகுறித்து அவரின் செய்தித் தொடர்பாளர் மானுவல் அடோர்னி, "தொற்று நோய் காலத்தில் ஏற்பட்ட சுகாதார மேலாண்மை பிரச்சினைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆர்ஜென்டினாவின் இறையாண்மையில் ஒரு சர்வதேச அமைப்பு தலையிட அனுமதிக்க முடியாது" என்று தெரிவித்தார். உலக சுகாதார அமைப்புக்கு 8.75 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கி வந்த ஆர்ஜென்டினா, இந்த அமைப்பின் மொத்த நிதியில் 0.11% பங்குதாரராக இருந்தது.
இதைத் தவிர, அமெரிக்கா உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகுவதற்கான அரசாணையை அதன் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை வெளியிட்டுள்ளார். அமெரிக்கா ஆண்டுதோறும் 325 மில்லியன் டாலர் நிதி வழங்குவதாக இருந்த நிலையில், சீனா வெறும் 39 மில்லியன் டாலர் மட்டுமே வழங்குவதாக டிரம்ப் குற்றம்சாட்டினார். மேலும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்திலிருந்தும் அமெரிக்கா விலகுவதாகவும், அந்த அமைப்புக்கு வழங்கப்படும் முழு நிதியையும் நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளார்.