திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் நாளை ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் நாளை காலை 10 மணி முதல் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது .இந்த டிக்கெட்டுகள் 20ம் தேதி காலை 10 மணி வரை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று உற்சவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்டவர்களுக்கான டிக்கெட் 22ஆம் தேதி காலை 10 மணி முதல் வெளியிடப்பட உள்ளது. அதேபோன்று 22 ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஜூலை மாத ஒதுக்கீடு, அம்மாவட்ட தரிசன ஸ்லாட்டுகள் ஆகியவை வெளியிடப்பட உள்ளன. மேலும் அங்கப்ரதர்ச்சனம் டோக்கன்கள், முதியவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச தரிசன டோக்கன்கள், ஸ்ரீவாரி ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட உள்ளன. பக்தர்கள் இவற்றை கவனத்தில் கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.