ஆயுத படை தினம் குறித்து தளபதிகள் மரியாதை செலுத்தினர்.
டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் ஆயுத படை தினத்தை முன்னிட்டு முப்படைகளின் தலைமை தளபதியான ஜெனரல் அனில் சவுகான் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே, விமான படை தலைமை தளபதி வி.ஆர். சவுத்ரி மற்றும் கடற்படை தலைமை தளபதி ஆர். ஹரி குமார் ஆகியோரும் தேசிய போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.