ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில், சீனர்கள் மற்றும் வெளிநாட்டினர்கள் வழக்கமாகத் தங்கும் விடுதியில் இன்று துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. Shahr-e-Naw பகுதியில் வசிக்கும் மக்கள், பயங்கர வெடி சத்தத்தை கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து, சரமாரி துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த சம்பவத்தால் நேர்ந்த சேதங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
ஆப்கானிஸ்தானின் ஸ்பின் போல்டாக் கேட் பகுதியில், ஞாயிறு அன்று நடந்த குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்தனர். மற்றும், 20 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை, அந்நாட்டு ஊடகம் டோலோ நியூஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.