ஆப்பிரிக்க நாட்டில் பயங்கரவாதிகள் என நினைத்து பொதுமக்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு கொன்றுள்ளது.
ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. மேலும் ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பினர் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் ராணுவத்தினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அங்கு முகாமிட்டிருந்தவர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஆனால் இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 33 பேர் பலியாகி உள்ளதாக அந்த நாட்டின் ஊடகம் தெரிவித்துள்ளது.