வெள்ள நிவாரணத்தை தொடர்ந்து பொங்கல் பரிசுத்தொகை வழங்க ஏற்பாடு

December 11, 2023

தமிழகத்தின் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகை வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. வங்க கடலில் உருவான்ன புயலின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் பாதிப்பில் இருந்து தற்போது மக்கள் மீண்டு வருகின்றனர். இந்த நிலையில் புயல் பாதித்தவர்களுக்கு நிவாரண நிதியாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இதனை 10 நாட்களுக்குள் மக்களுக்கு வழங்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி இருந்தது. […]

தமிழகத்தின் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகை வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

வங்க கடலில் உருவான்ன புயலின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் பாதிப்பில் இருந்து தற்போது மக்கள் மீண்டு வருகின்றனர். இந்த நிலையில் புயல் பாதித்தவர்களுக்கு நிவாரண நிதியாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இதனை 10 நாட்களுக்குள் மக்களுக்கு வழங்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி இருந்தது. ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக பணத்தை கொடுத்து முடித்ததும் பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் ரூபாய் ஆயிரம் வழங்க வேண்டிய நிலையில் அரசு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 2.19 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரூபாய் ஆயிரம் கடந்த ஆண்டு பொங்கலுக்கு வழங்கப்பட்டது. அதேபோல் இந்த வருட பொங்கல் பண்டிகைக்கு மக்கள் இதனை எதிர்பார்த்து வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகள் தற்போது தொடங்கியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu