விநாயகர் சதுர்த்தி - சென்னையில் சிலைகளை கரைக்க 4 இடங்களில் ஏற்பாடு

September 7, 2023

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வழிபாடு செய்து அதனை கரைக்க சென்னையில் 4 இடங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் வருகின்ற 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சென்னை மாநகர் முழுவதும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைப்பதற்கு போலீசார் அனுமதி அளித்து இருப்பதாக தெரிய வருகிறது. வீடுகளிலும் சிறிய விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபடுவார்கள். சென்னையில் மட்டும் இதுவரை 50 ஆயிரத்துக்கு […]

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வழிபாடு செய்து அதனை கரைக்க சென்னையில் 4 இடங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் வருகின்ற 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சென்னை மாநகர் முழுவதும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைப்பதற்கு போலீசார் அனுமதி அளித்து இருப்பதாக தெரிய வருகிறது. வீடுகளிலும் சிறிய விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபடுவார்கள். சென்னையில் மட்டும் இதுவரை 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட உள்ளன. இந்த சிலைகளை 18ஆம் தேதிகளுக்கு பிறகு ஒரு வாரம் வைத்து பூஜை செய்வார்கள். பின்னர் அவை 24ம் தேதி ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்கபடும். இதற்காக சென்னையில் பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு, மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை ஆகிய 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்காக 17 வழித்தடங்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். மேலும் 20 ஆயிரம் போலீசார் சென்னையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu