330 சிவாலயங்களிலும் மகா சிவராத்திரி கொண்டாட ஏற்பாடு செய்ய அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள 330 சிவாலயங்களின் சார்பில் ஆடல் வல்லான் சிவபெருமானின் அருளாற்றலையும், பெருமையையும் பறைசாற்றும் வகையிலும், சிவ வழிபாடு செய்ய வரும் பக்தர்களின் மனம் மகிழும்படி நமது பாரம்பரிய கலை, கலாச்சார மற்றும் ஆன்மீக, சமய நிகழ்ச்சிகளுடன் மகா சிவராத்திரி விழாவினை சிறப்பாக கொண்டாடிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள 330 சிவாலயங்களிலும் வருகிற 18-ந்தேதி மாலை முதல் 19-ந்தேதி காலை வரை மகா சிவராத்திரி திருவிழா பக்தர்கள் பங்கேற்புடன் சிறப்பாக கொண்டாடிட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.