டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான மோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபட்டார். அதில் மார்ச் 28 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் ஏப்ரல் 1ம் தேதி வரை இந்த அமலாக்கத்துறை காவல் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த்தபட்டார். அதில் அவருக்கு 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட உள்ளார்.














