அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கைது செய்யப்பட வாய்ப்பு

January 4, 2024

அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்திய பிறகு அவர் கைது செய்யப்படலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை மூன்று முறை சமன் அனுப்பியது.இதற்கு முன்னதாக கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சுமார் ஒன்பது மணி நேரம் சிபிஐ அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தியது இருப்பினும் இவர் குற்றவாளி என சேர்க்கவில்லை. அதன் பின்னர் நவம்பர் 2ம் தேதி மற்றும் டிசம்பர் […]

அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்திய பிறகு அவர் கைது செய்யப்படலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை மூன்று முறை சமன் அனுப்பியது.இதற்கு முன்னதாக கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சுமார் ஒன்பது மணி நேரம் சிபிஐ அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தியது இருப்பினும் இவர் குற்றவாளி என சேர்க்கவில்லை. அதன் பின்னர் நவம்பர் 2ம் தேதி மற்றும் டிசம்பர் 21ஆம் தேதிகளில் ஆஜராக சமன் அனுப்பியிருந்தது. நேற்று மூன்றாவது முறையாக ஆஜராக சமன் அனுப்பியிருந்தது. இதில் அவர் மூன்றாவது முறையாக ஆஜராகவில்லை.இந்நிலையில் அமலாக்கத்துறையினர் அவரது வீட்டில் சோதனை நடத்த வாய்ப்புள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்படலாம் எனவும் டெல்லி மாநில மந்திரி ஆதிஷி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu