அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு முடிவடைந்ததை அடுத்து திகார் சிறையில் சரணடைந்தார்.
டெல்லி அரசு மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால ஜாமின் வழங்கியது. இவரது இடைக்கால ஜாமின் மனுவை நீட்டிக்க தாக்கல் செய்திருந்த மனுவினை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனை தொடர்ந்து நேற்றுடன் இடைக்கால ஜாமீன் முடிவடைந்த நிலையில் கெஜ்ரிவால் திகார் சிறையில் சரணடைந்தார்