தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ASEAN, தனது முதல் கூட்டு ராணுவ ஒத்திகையை தென் சீன கடலில் திட்டமிட்டுள்ளது. இந்தோனேசியாவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பு, நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தென் சீனக் கடலின் தெற்கு முனை பகுதியான நார்த் நடுநா கடலில், ஒத்திகைகள் நடத்தப்பட உள்ளன. வரும் செப்டம்பர் மாதத்தில், இந்த ஒத்திகை நடைபெறும் என்று இந்தோனேசிய ராணுவ தலைமை அதிகாரி யுடோ மர்கனோ அறிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான மோதல் காரணமாக, ASEAN அமைப்பின் ஒற்றுமை சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் உறுப்பினர்களான வியட்நாம், பிலிப்பைன்ஸ், புரூனே, மலேசியா ஆகிய நாடுகளும் சீனாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றன. எனவே, இந்த அமைப்பின் இறையாண்மையை பாதுகாக்க, இந்த ராணுவ ஒத்திகை திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.