ஹிந்துஜா குழுமத்தை சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ஷேனு அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஷேனு அகர்வால், எஸ்கார்ட்ஸ் குபோட்டா லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக இருந்து வந்தார். இந்த நிறுவனத்தை சர்வதேச அரங்கில் முன்னேற்றியதில் இவர் பெரும் பங்கு வகித்தார். தற்போது, அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தொழில்நுட்ப மேம்பாடு, வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்கள் துறையில் இவர் பணியாற்ற உள்ளார்.
இவரது நியமனம் குறித்து பேசிய அசோக் லேலண்ட் நிறுவனத்தின் சேர்மன் தீரஜ் ஹிந்துஜா, “வர்த்தகத் துறையில், ஏற்கனவே தனது திறமைகளை நிரூபித்துள்ள ஷேனு அகர்வாலை அசோக் லேலண்ட் வரவேற்கிறது. இவரது வருகை மூலம் நிறுவனம் மேலும் பலம் பெறும் என்று நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.