ஹிந்துஜா குழுமத்தின் அசோக் லேலண்ட் நிறுவனம், புதிய இலகுரக வாகனமான ‘சாத்தி’யை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.
இதை தில்லியில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் கண்காட்சியில், மத்திய கனரக தொழில்நுட்ப மற்றும் உருக்குத் துறை அமைச்சர் ஹெச்.டி. குமாரசாமி வெளியிட்டார். ‘சாத்தி’ என்ற பெயரிடப்பட்ட இந்த வாகனம், ஆரம்ப நிலை பிரீமியம் இலகுரக வாகன பிரிவில் உள்ளது. 45 ஹெச்பி சக்தி கொண்ட இது, அதே பிரிவின் மற்ற வாகனங்களைவிட 24% அதிக சரக்கேற்றும் இடவசதி (1,120 கிலோ) கொண்டுள்ளது. புரட்சிகரமான எல்என்டி தொழில்நுட்பம் இதனை இயக்குவதில் எளிமையாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘சாத்தி’ வாகனம், அதன் சந்தைப் பிரிவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.