அசோக் லேலண்ட் நிறுவனம் தனது நான்காம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 5 மடங்கு உயர்ந்து, 802.71 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவே, முந்தைய ஆண்டில் 157.85 கோடி மதிப்பில் நிகர லாபம் பதிவு செய்யப்பட்டு இருந்தது. மேலும், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், நிறுவனத்தின் இயக்க வருவாய் 9926.97 கோடியில் இருந்து 13202.55 கோடியாக உயர்ந்துள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் மொத்த செலவுகள் 9429.55 கோடியில் இருந்து 12085.5 கோடியாக உயர்ந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, கடந்த 2023 ஆம் நிதி ஆண்டில், அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் நிகர லாபம் 1361.66 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவே 2022 ஆம் நிதி ஆண்டில் 285.45 கோடி ரூபாய் மதிப்பில் நிகர இழப்பு பதிவாகி இருந்தது. எனவே, 2023 ஆம் நிதி ஆண்டு அசோக் லேலாண்ட் நிறுவனத்திற்கு மிகவும் லாபகரமானதாக அமைந்துள்ளது. மேலும், ஒட்டுமொத்தமாக, 2023 ஆம் நிதி ஆண்டில், நிறுவனத்தின் இயக்க வருவாய் 41672.6 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, நிறுவனத்தின் லாபத்தை கணக்கில் கொண்டு, நிறுவனத்தின் பொது பங்கு ஒன்றுக்கு 2.6 ரூபாய் ஈவுத்தொகை வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.














