ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் 5 முதல் 6 புதிய வாகனங்களை இந்த ஆண்டில் வெளியிடுகிறது. அண்மையில் வெளியான நிறுவனத்தின் காலாண்டு அறிக்கையில், இது பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது.
இலகுரக வணிக வாகனங்கள் தயாரிப்பில் அசோக் லேலண்ட் முன்னணியில் உள்ளது. அந்த ரகத்தில், 5 - 6 புதிய வாகனங்களை வெளியிட நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் காலாண்டு அறிக்கையில், நடப்பு நிதி ஆண்டுக்கு 500 முதல் 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “கடந்த 2024 ஆம் நிதியாண்டு அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கு வரலாற்று சிறப்புமிக்க வருடமாக அமைந்தது. எபிட்டா மார்ஜின், லாபம் ஆகியவை வரலாற்று உச்சமாக பதிவானது. இந்த நிலையில், எங்களின் புதிய வாகனங்கள் அறிமுகம் செய்யப்படுகிறது. அதன்படி, இலகுரக வணிக வாகனங்கள் துறையில் 70 முதல் 80% சந்தை பங்களிப்பு அசோக் லேலண்ட் உடையதாக மாறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.