கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனைகள் சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றனர்.
கவுகாத்தியில் நடந்த மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா மற்றும் தனிஷா கிரஸ்டோ ஜோடி, சீனாவின் லி ஹுவா மற்றும் வாங் ஜி ஜோடியுடன் இறுதிச்சுற்றில் மோதின. இந்தப் போட்டியில் இந்திய ஜோடி 21-18, 21-12 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
மற்றொரு பிரிவான மகளிர் ஒற்றையர் பாகத்தில், இந்தியாவின் அன்மோல் கார்ப் சீனாவின் காய் யான் யானிடம் 21-14, 13-21, 19-21 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தார்.














