சீனாவின் தேசிய பெட்ரோலியக் கழகம், 580 நாட்களில் ஆசியாவின் மிக ஆழமான 10,910 மீட்டர் ஆழத்திலான கிணற்றை தோண்டும் சாதனை படைத்துள்ளது. இந்த மாபெரும் திட்டமான ‘ஷெண்டிடேக் 1’ கடந்த 2023 மே 30ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஜின்ஜியாங் உய்குர் பகுதியில் உள்ள தக்லிமகன் பாலைவன மையத்தில், பூமியின் பரிமாணம் மற்றும் புவியியல் சார்ந்த ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக இந்த ஆழமான கிணறு தோண்டப்பட்டது. குறிப்பாக, இறுதியில் 910 மீட்டரை தோண்ட 300 நாட்கள் பிடித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் 12,000 அடி வரை துளையிடும் மிகப்பெரிய கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது. உலகின் இரண்டாவது ஆழமான கிணறாகும் இதை, ரஷ்யாவின் கோலா சூப்பர்டீப் போர்ஹோல் (SG-3) பின்னடைவாக அமைந்துள்ளது. 1989இல் முடிக்கப்பட்ட ரஷ்ய கிணறு 12,262 மீட்டர் ஆழம் கொண்ட உலகின் மிக ஆழமான கிணறாகும். சீனாவின் புதிய சாதனை, நிலத்தடி ஆராய்ச்சி மற்றும் இயற்கை வளங்களின் கண்டுபிடிப்பில் ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.