வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது.
வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு பதவி விலக கோரியும் இடைக்கால அரசின் மூலம் தேர்தல் நடத்த கோரியும் எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. இந்த சூழலில் தேர்தல் குறித்த அறிவிப்பு வந்துள்ளது. இந்த போராட்டம் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது. அப்போது எதிர்க்கட்சியினருக்கும் காவல்துறைக்கும் ஏற்பட்ட மோதலில் ஒரு போலீசார் உட்பட ஐந்து பேர் பலியாகினர். சுமார் 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.