ஆசிய வளர்ச்சி வங்கி இலங்கைக்கு ரூபாய் 1660 கோடி கடன் உதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் தவித்து வந்த இலங்கை தற்போது மீண்டு வருகிறது. அந்நாட்டுக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கி வருகிறது. இதில் முதல் தவணை வழங்கப்பட்டு விட்டது. இப்போது இரண்டாவது தவணைக்காக இலங்கை காத்திருக்கிறது. இந்நிலையில் ஆசிய வளர்ச்சி வங்கி இலங்கைக்கு ரூபாய் 1660 கோடி கடன் உதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டின் வங்கி துறையில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது. அதோடு வங்கி நிர்வாகத்தை வலுப்படுத்தவும் சிறு, குறு நிலையான நிதியை மேம்படுத்தவும் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.














