பூமியை நோக்கி வரும் பெரும்பாலான விண்கற்கள், பூமிக்கு ஆபத்து ஏற்படுத்தாமல் பூமியை கடந்து சென்று விடும் ஆனால், கடந்த பிப்ரவரி 12-ம் தேதி, பூமியை நெருங்கிய விண்கல் ஒன்று, எரி கல்லாக விழுந்துள்ளது. பூமியின் வளிமண்டலத்தில் உள்ள வெப்பம், விண் கல்லை சூடாக்கி வெடிக்க செய்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. எனவே, மிகப் பெரிய விண்கல் ஒரு சிறிய எரி கல்லாக ஐரோப்பா வானை கடந்து சென்றுள்ளது.
இந்த விண்கல், பூமியில் விழுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் ஐஸ்லாந்து பகுதியில் விண்கல் ஒன்று விழுந்தது. அதைத் தொடர்ந்து, தற்போதைய நிகழ்வு சொல்லப்பட்டுள்ளது. இந்த எரிகல் நிகழ்வை குறித்த பதிவுகள், இங்கிலாந்து, வேல்ஸ், பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, ஜெர்மனி ஆகிய பகுதிகளில் இருந்து கிடைக்கப்பெற்றதாக ஐரோப்பிய விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. மேலும், பூமியின் வளிமண்டலம் மட்டும் இல்லை என்றால், இந்த விண்கல் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று கூறியுள்ளது.