நாசாவின் கோள் பாதுகாப்பு அமைப்பு, இன்று, அபாயகரமான விண்கல் ஒன்று, பூமியை நெருங்குவதாக சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. Asteroid 2021 AE என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல், இன்று பூமிக்கு 6.3 மில்லியன் கிலோமீட்டர் தொலைவிற்கு நெருக்கமாக வருகிறது. அதே வேளையில், அதன் பாதையில், 5193 கிலோ மீட்டர் வரை, பூமியை மிக மிக நெருக்கமாக கடந்து செல்ல உள்ளது. இந்த விண்கல், ஏற்கனவே, மணிக்கு 53830 கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி பயணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு குறைவான தூரத்திற்கு, விண்கல் பூமிக்கு நெருக்கமாக வர உள்ளதால், நாசா இந்த விண்கல்லை அபாயகரமான விண்கல் என்று எச்சரித்துள்ளது. இந்த விண்கல், அப்போலோ குடும்பத்தை சேர்ந்ததாகும். இது, கடந்த ஜனவரி 2ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. சூரியனைச் சுற்றிவர 728 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. மேலும், சூரியனிலிருந்து 369 மில்லியன் கிலோமீட்டர் தொலைவாகவும், 105 மில்லியன் கிலோமீட்டர் நெருக்கமாகவும் சுற்றுவட்ட பாதையில் உள்ளது.