கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவுகள் உண்டு என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசியால் ரத்தம் உறைதல் பாதிப்பு ஏற்படலாம் என்று மருந்து நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த மருந்து நிறுவனமான ஆஸ்ட்ராசெனேகா இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
கோவிட் வைரஸை கட்டுப்படுத்த ஆஸ்ட்ராசெனேகா ஆராய்ச்சியாளர்கள் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கோவிஷீல்டு எனும் தடுப்பூசியை தயாரித்தனர். இதனை செலுத்திக்கொண்டால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது என்றும், சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படுவதாகும் பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது. இங்கிலாந்தில் ஜேமி ஸ்காட் என்ற நபர் இந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டதால் மூளையில் தீவிர பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 2021 ஆம் ஆண்டு அவர் இந்த தடுப்பூசியை செலுத்திக்கொண்ட பின்னர் அவருக்கு மூளையில் ரத்தம் உறைந்து நிரந்தர பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. பின்னர் அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்நிறுவனம் இதற்கு பதில் அளிக்கையில், இந்த தடுப்பூசியை செலுத்திக்கொண்டோரில் ஒரு சிலருக்கு ரத்தம் உறைதல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறியது. இதன் காரணமாக ரத்த தட்டுகளின் எண்ணிக்கை கணிசமாக குறைய கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு குறித்த விரிவான தகவல் விரைவில் வெளியிடப்படும்.