பிரபஞ்சத்தை பற்றிய பல்வேறு தகவல்களை அறிவதற்காக மிகப்பெரிய டிஜிட்டல் கேமரா உருவாக்கப்பட்டுள்ளது. சிலி நாட்டு விண்வெளி வீரர்கள் இந்த கேமராவை பயன்படுத்தி பிரபஞ்சம் குறித்த தகவல்களை சேகரிக்க உள்ளனர்.
உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் கேமரா விண்வெளி ஆராய்ச்சிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளது. ஒரு சிறிய கார் போன்ற அளவில், 2.8 மெட்ரிக் டன் எடையுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், விண்வெளியில் இருந்து இதுவரை பார்த்திராத காட்சிகள் படமாக்கப்படும் என கருதப்படுகிறது. சுமார் 800 மில்லியன் டாலர் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் கேமரா, 2025 ஆம் ஆண்டு முதல் புகைப்படம் எடுக்கும் பணியை தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.. இந்த கேமரா மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள் 3200 மெகா பிக்சல் உடன் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.