சிரியாவில் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 14 பாதுகாப்புப்படையினர் பலியாகினர்.
சிரியாவின் கிர்பெத் அல்-மாஸா பகுதியில், முன்னாள் ஆட்சி அதிகாரி முகமது கன்ஜோ ஹசனை கைது செய்ய பாதுகாப்புப்படையினர் ரோந்து குழுவினை அனுப்பினர். இதற்கு பதிலாக, ஹசனின் ஆதரவாளர்கள் மற்றும் உள்ளூர் போராளிகள் பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்புப் படையினரும் பதிலாக தாக்குதல் நடத்தினர். இதில் 14 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர். 3 போராளிகள் கொல்லப்பட்டனர். மேலும் சிலர் காயமடைந்தனர் என சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது. அந்தப் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முன்பு, 8ம் தேதி பஷிர் அல் அசாத் தலைமையிலான அரசு கவிழ்ந்து, அபு முகமது அல் ஜவ்லானி தலைமையிலான ஹயத் தஹிர் அல் ஷம் ஆட்சியை கைப்பற்றியது.