நைஜீரியாவில், ஜிகாவா பகுதியில் ஒரு பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தியில் 147 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நள்ளிரவில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்தது. இதன்பின், லாரியில் உள்ள பெட்ரோல் கசிந்து வெளியேறியதால், லாரி தீப்பிடித்து எரிந்தது. காவல் துறையின் தகவல்படி, இதுவரை 147 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நைஜீரியாவில் சரக்கு ரெயில் போக்குவரத்து பாதிப்படைந்ததால், எரிபொருள் டேங்கர் லாரிகளில் சாலை மார்க்கமாகக் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது.