ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் பாகிஸ்தான் விமானப்படை நேற்று வான்வழி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 46 பேர் உயிரிழந்தனர்.
இதில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் அனைவரும் பொதுமக்களே என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் விமானப்படை ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து இந்த தாக்குதலை நடத்தியதால், அந்த பகுதி சூழ்நிலையே பதற்றமானதாக மாறியுள்ளது. இது இரு நாடுகளுக்கிடையே மேலும் இழுப்புகளை ஏற்படுத்தக்கூடும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.