காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் - 500 பேர் பலி

October 18, 2023

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் உள்ள அல்-அக்னி அரபு மருத்துவமனையில் 500 பேர் பலியானதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல், காசா இடையே கடந்த 12 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இதில் பலி எண்ணிக்கை 4000-ஐ கடந்துள்ளது. இந்நிலையில் வடக்கு காசாவில் தாக்குதல் நடத்த இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது. அதனை அடுத்து அங்குள்ள மக்கள் தெற்கு காசாவிற்கு இடம் பெயர வேண்டும் என்று அறிவுறுத்தியது. அதனால் லட்சக்கணக்கான மக்கள் தெற்கு காசாவிற்கு அடைக்கலம் […]

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் உள்ள அல்-அக்னி அரபு மருத்துவமனையில் 500 பேர் பலியானதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல், காசா இடையே கடந்த 12 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இதில் பலி எண்ணிக்கை 4000-ஐ கடந்துள்ளது. இந்நிலையில் வடக்கு காசாவில் தாக்குதல் நடத்த இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது. அதனை அடுத்து அங்குள்ள மக்கள் தெற்கு காசாவிற்கு இடம் பெயர வேண்டும் என்று அறிவுறுத்தியது. அதனால் லட்சக்கணக்கான மக்கள் தெற்கு காசாவிற்கு அடைக்கலம் புகுந்தனர். சிலர் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக சென்றன.ர்
இந்நிலையில், இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று தெற்கு காசா மீது சரமாரியாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. தெற்கு காசா நகரங்களான ரபா மற்றும் கான்யூனிஸில் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டது. இந்த தாக்குதலில் காசாவில் உள்ள அல்-அக்னி அரபு மருத்துவமனையில் 500 பேர் பலியானதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்திருந்தனர். அவர்களோடு போரில் பாதிக்கப்பட்டவர்களும் தஞ்சம் அடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரபாவில் 27 பேரும், கான் யூனிசில் 30 பேரும் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu