காங்கோ சிறையில் இருந்து 6 ஆயிரம் கைதிகள் தப்பினர்.
காங்கோ ஜனநாயக குடியரசின் கிழக்கு பகுதியில் உள்ள கோமா நகரில் எம்-23 கிளர்ச்சி குழுவினர் கடந்த வாரம் தாக்குதல் நடத்தி, ஐ.நா. அமைதிப்படை வீரர்களுடன் 13 பேர் பலியாகினர். இதன் தொடர்ச்சியாக, முன்செஸ்க் நகரில் உள்ள சிறைச்சாலை பகுதியிலும் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். அங்கு சிறை காவலர்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் வாய்ப்பை பயன்படுத்தி, சிறையில் உள்ள சுமார் 6,000 கைதிகள் தப்பி ஓடியதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் பரவியுள்ளதாக கூறப்படுகிறது.