அமெரிக்காவில் உள்ள லூசியானா மாகாணத்தில் மூடுபனியால் வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டதில் 8 பேர் பலியாகினர்.அமெரிக்காவில் உள்ள லூசியானா மாகாணத்தின் லாபிளேஸ் நகரிலிருந்து இல்லினாய்ஸ் மாநில சிகாகோ வரை சுமார் 1500 கிலோ மீட்டர் நீளமான விரைவுவழிச் சாலை உள்ளது. இந்த சாலையின் பெயர் இன்டர்ஸ்டேட் 55. இந்த சாலை லூசியானா மாநிலத்தில் மட்டும் 15 கிலோமீட்டர் உள்ளது. அப்பகுதியில் பஞ்சட்ரைன் எனும் ஏரி உள்ளது. ஏரிக்கு அருகே உள்ள ஒரு குட்டை வழியாக இந்த சாலை செல்கிறது. தற்போது காலநிலை மாற்றம் காரணமாக இந்த குட்டை வறண்டு கிடக்கிறது. அவ்வப்போது ஏதேனும் பொருள் தீ பற்றி எரியும். இந்நிலையில் இந்த இடத்தில் ஏதோ பொருள் எரிந்ததால் புகை கிளம்பியது. இந்த புகையுடன் ஏரியிலிருந்து நீராவியும் கலந்து கொண்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் மூடுபனி உருவானது. நேரம் செல்ல செல்ல அந்தப் பகுதி வெறும் மூடுபனியால் சூழப்பட்டது. இதன் காரணமாக இந்த விரைவு சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகளுக்கு சாலையை காண இயலவில்லை. இந்நிலையில் அங்குள்ள செயின்ட் ஜான் தேவாலயத்திற்கு அருகே வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சங்கிலி தொடர் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 158 கார்கள் சுமார் மோதிக்கொண்டன என்று கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் ஏழு பேர் பலியாகினர். பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்த நிகழ்வை குறித்த வீடியோக்கள் தற்போது வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.